பக்கம்:ஒரே முத்தம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே மூத்தம் 21 குமரி:- ஏழைகள்! வேறெங்கே சாமி, அரண்மனையிலா ஆட முடியும்? க 1-வது கா:- பொம்புளை மனம் வைத்தால், அரண்மனை மட்டுமல்ல, அரசர் தலைமேலும் ஆடலாம். பகு 2-வது கா:- பரமசிவன் தலையிலே, கங்காதேவி ஆடற மாதிரி. குமரி:- அதற்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணுங்க சாமி. 1-வது கா:- அதிர்ஷ்டம், உன் மாதிரிப் பெண்களுக்குத் தானே முதலில் அடிக்கும். இதோ பார், நீ இந்தமாதிரி கந்த லுங் கிழிசலுமா உடுத்தி, சங்கு மணிகளை மாட்டிக்கொண்டிருப் னால் சகிக்க முடியவில்லை! உன் உடம்பெல்லாம் ரத்ன மாலைகள் போட்டுப் பார்க்கவேண்டும். லுங்திமா குமரி:- ஆசை இருக்கு. ஆனா, ஆளு என்னாட்டந்தான் இருக்கீங்க! UUT 1-வது கா:- (குமரியை அருகே கூப்பிட்டு மெதுவாக) எங்கள் எஜமான் விபீஷணர் உன்னைக் கண்டால், கடித்துத் குமரி:- ஆ! ராக்ஷஸன் போல் இருக்கு! 1-வது கா:- இல்லை. உன் அழகிலும், ஆட்டத்திலும், அப்படியே மயங்கி, அள்ளி அள்ளிக் கொடுப்பார். குமரி:- நிஜமாகவா?வ 1-வது கா:- அவர் ஆஸ்தியா செலவாகுது? இன்பபுரி சாம் ராஜ்யத்துப் பணம். அதற்கு ராஜப்பிரதிநிதி இமயாவிடம் இரும் புப்பெட்டி; விபீஷணரிடம் திறவுகோல். அவர் இஷ்டம்போல் பொன்னாபிஷேகம் செலவு. இன்பச் செலவு. அல உனக்கும் செய்யச் சொல்றேன். போதுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/23&oldid=1702609" இலிருந்து மீள்விக்கப்பட்டது