பக்கம்:ஒரே முத்தம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஒரே முத்தம் குமரி:- நீங்கள் மகாமேதாவி (மது தருகிறாள்) விபீஷ:- இல்லாவிட்டால் மன்னனாக முடியுமா? (நெருங் குதல்) குமரி - சரி! என் சபதம் நிறைவேறிற்று நாளைக்கே திரு மண நாள் குறித்துவிடுங்கள். . விபீஷ:- நாள், நட்சத்திரம், பிறகு இருக்கட்டும், மின் னல்! இந்த இரவு வீணாகிவிடுவதா? குமரி:- ஏ, அப்பா! கல்யாணம் ஆகறதுக்கு முன்னே ஒரு புருஷனைத் தொடறது எங்க ஜாதி வழக்கப்படி பாவம். . . விபீஷ:- நீ தொடவேண்டாம்; நான் தொடுகிறேன் (வெறியோடு நெருங்க, குமரி நடனமாடுவதுபோல் சுற்றிச்சுற்றி ஆடிக்கொண்டு மதுவை ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள். விபீஷ ணன் காமவெறியில் தலைதடுமாறி அவளை பலாத்காரமாய்க் கட்டி அணைக்கிறான். குமரி கத்திவிடுகிறாள் சித்ரா ஓடிவருகிறாள். அப்பொழுது விபீஷணன் மற்றொரு கோப்பைமதுவை மொண்டு குடிக்கிறான். சித்ரா குமரியின் மேலுடையை வாங்கி அணிந்து கொண்டு விளக்கையும் சிறிது அடக்குகிறாள். அதற்குள் குமரி பறந்துவிடுகிறாள். குமரி ஓடும்போது சதிக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறாள். சித்ராவை குமரி என்று நினைத்த) . விபீஷ:- பைத்தியக்காரி! இன்னுமா வெட்கம்? சித்ரா:- தொடறீங்களே; கூச்சமா இருக்கு. விபீஷ :- ஹ ஹ ஹ! மின்னல்! இதோ நீ மின்னல், நான் இடி,வா! காதல் மழை பொழிவோம். வரமாட்டாய்? இன்ப புரியின் மகாராஜா அழைக்கிறேன். சித்ரா:- மகாராஜா! என்னை ஏமாற்றத்தானே பார்க்கி றீர்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/36&oldid=1702634" இலிருந்து மீள்விக்கப்பட்டது