பக்கம்:ஒரே முத்தம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 71 [1-வது காலி விபீஷணன் காதில் ரகசியமாகச் சொல்லுகிறான் ஏதோ. அதைச்சித்ரா அருகே ன் வந்து கவனிக்கவே அதைக்கண்ட விபீஷ ணன் ஜாடையாகப் பேசுகிறான்) விபீஷ:- பெயர் என்ன? பொன்னியா? 1-வது கா:- ஆமாம், மலையன் மகள். விபீஷ:- தீண்டப்படாதவள், தாசித்தொழில் செய்கிறாள். பெரிய இடத்தின் பெயர்களைப் பாழ்படுத்துகிறாள். நீ எப்படிக் கண்டுபிடித்தாய்? 1-வது கா:- முதலில் வதந்திங்க, பிறகு விசாரித்தேன். இப்ப நான் சொல்றது உண்மைங்க. நான் அவளை நேராகவே பார்த்திருக்கேன். ஊரெல்லாம் சிரிக்குதுங்க. (சித்ராவிற்காக, ஆத்திரமடைவதுபோல் பசாங்கு செய்து விஷயத்தை கிரகிக்கிறான்) விபீஷ:- ஊர் சிரிக்கும், விபீஷணன் ஆட்சியில் இந்த விப சாரம் நடப்பதா என்று கைக்கொட்டிச் சிரிக்கும்! உம்.... அந்த வேசி விபசாரம் செய்வதற்கேற்ற அழகியோ? 1-வது கா:- அழகிலே மாம்பழந்தாங்க. அதிலேதான் அந் தப் பயல் மயங்கிட்டாங்க. விபீஷ:- மயங்குவான் மடையன்! அவன் மயங்கியது ஒரு குற்றம். அவனை மயக்கியது பெருங்குற்றம். மயக்கும் அளவுக்கு அவள் இளம் பெண்ணோ? 1-வது கா:- பருவமடைந்த பத்தரை மாற்றுப் பொன் னுங்க. விபீஷ:- பொன்! அழகை வியாபாரம் செய்யும் அரக்கிக் குப் பெயர் பொன்! பொன் என்கிறாயே; அந்த தடிச் செருக்கி தங்க நிறமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/73&oldid=1702690" இலிருந்து மீள்விக்கப்பட்டது