இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78 ஒரே முத்தம் பேசுவது? என் நெஞ்சாரக் காதலித்தவரா என்னை நெருப்பில் தள்ளுவது? வேண்டாம். இந்த அனாதையைக் காப்பாற்றுங்கள். புத்த:- பேசாதே! (திரையில் இருள். அடுத்த காட்சித் தோற்றம்) 'காட்சி 21. உ இடம் :- விபீஷணன் மாளிகை. விபிஷ:- தீண்டத் தகாதவர்கள் உயர் ஜாதிக்காரனுடன் உட்கார்ந்தால், சாம்ராஜ்ய சட்டப்படி என்ன தண்டனை? மலை:- சிறையில் தள்ளுவார்கள். விபிஷ:- உறவாடினால்? மலை:- சிரச்சேதம். விபீஷ:- விபசாரத் தொழிலில் ஈடுபட்டால்? மலை:- சித்ரவதை! விபீஷ:- இத்தனை குற்றங்களும் நீங்கள் செய்திருக்கிறீர்கள். (மலையன் பொன்னி திகைப்பு.) விபீஷ:- மகளின் அழகை முதலாக வைத்து, மதிப்புள்ள குடும்பங்களின் வாலிபர்களை மயக்கி, மானமற்ற விபசாரத் தொழில் செய்திருக்கிறாய். மலை:- விபசாரமா? விபீஷ:- வேறென்ன, வியாபாரமா?