பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


இடத்தில் உட்காந்து, நிகழ்ச்சிகளில் மனம்லயித்துவேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

குத்துச் சண்டைப் போட்டித் தொடங்கி விட்டது. "பிசிடோரஸ்" என்ற பெயருள்ள வீரன் போட்டியில். கலந்து கொண்டான். அவன் செய்த சண்டை எல்லோருக்கும் மயிர்சிலிர்க்க வைக்கக் கூடியதாக இருந்தது. தன். எதிரியை எளிதாக மட்டும் அல்ல, இலாவகத்தோடும் சண்டையிட்டு மாபெரும் வெற்றியும் பெற்று விட்டான். பார்வையாளர் பகுதியிலே. மாறு வேடத்தில் பதுங்கியிருந்த மங்கைக்கோ அளவில்லாத ஆனந்தம்! ஆனந்தம் மிதமிஞ்சி வெறியாகியது. அந்த வெறி சந்த ஆவேசத்தினால், தன் அண இழந்தாள். தன் நிலையை மறந்தாள். ஒடிப் போய் அவனே ஆரத் தழுவிக் கொண்டாள். ஆசை தீர முத்தமிட்டாள். அவள் நடந்து கொண்ட ஆவேச நிக்லயிலே; அவள் தலைப் பாகைக் கலந்தது. ஒப்பனை உருவிழந்தது. பெண்ணனது கண்டு அந்த அரங்கமே அதிர்ச்சியுற்றது. ஆத்திரமடைந்தது.

ஆமாம்! பெண்ணெருத்தி உள்ளே புகுந்து விட்டான். என்றதும், பிரளயமே வந்து விட்டது போன்ற ஒர் உணர்வு. மக்கள் மருண்டனர். மயங்கினர். பரிதாபத்திற்குரிய பெண்ணப் பலமுறை பார்த்தனர். தானகவே சாவைத். தேடி வந்த தையலைக் கண்டு ஆத்திரப்பட்டவர் பலர். அனுதாபப்பட்டவர் சிலர்.

அதிகாரிகளின் முன்னே நிறுத்தப்பட்டாள். அந்தப் பெண். மரண தண்டனை நிச்சயம் என்ற முடிவுக்கே எல்லோரும் வந்து விட்ட நேரம் மங்கையோ, மரன் வாக்கு மூலம் போல,"தன் கதையைக் கூறத் தொடக் கிறிள். அதிகாரிகளும் குறுக்கிடவில்லை.