பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



65


மீண்டுமொரு புகழாரம் சூட்டிக் கொண்டது; அந்நாளில் தான் கூபர்டின. இவ்வுலகுக்குத் தந்த கோலாகலமான் செயல் நிகழ்ந்தேறியது, செல்வப் பெருங் குடியில் தோன்றிய பியரி கூபர்டின், சிங்காரமாகவே வாழ்க்கையைத் தொடங்கினர்.

'இராணுவத்திலே சேர்ந்து தாய் நாட்டுக்குத் தொண் டாற்ற வேண்டும்' என்பது அவரது பெற்றேரின் ஆவல். "பணக்காரக் குடும்பத்திலே வந்திருக்கிருேமே, உடம்பை ஏன் வருத்தி வாழ வேண்டும்’ என்ற உலுத்தர்களின் கூட்டத்திலே சேராமல், பெற்றேரின் பேராவலைத் தீர்க்க வேண்டி, இராணுவக் கல்லூரியிலே சேர்ந்தார், "வாழ்வு என்பது தியாகத்தின் அடிப்படையில்தான் துவங்குகிறதுஎன்பதை நன்கறிந்த அவர். இராணுவப் படிப்பை மேற் கொண்டார்.

என்ருலும். இராணுவப் படிப்பிலே அவருக்கு அதிக நாட்டமிருக்கவில்லை கருத்தோட்டமும் கண்ணுேட்டமும் மற்ற காரியங்களிலே தலையெடுத்து நின்று, தவழ்ந்தாடத் தொடங்கின. அரசியல் அவருக்கு அறிவு முகம் காட்டும் கண்ணுடியாக, ஆன்ற புகழ் தரும் முன்னேடியாக வந்து தின்றது. ஆகவே இராணுவ வாழ்க்கைத் தமக்கு சிறிதும் ஒத்து வராது என்ற உண்மையை உணர்ந்து இராணுவக் கல்வியில் பட்டம் பெறுவதற்கு முன்னதாகவே, கல்லூரியி s லிருந்து விலகிக் கொண்டார் பிறகு, சிறிது சிறிதாக, தன்னுடைய பொருள் முழுவதையும் அரசியலுக்கே அர்ப் பன்னித்த்தோடல்லாம்ல் வாழ்க்கையையும் அதற்காகவே செலவழிக்கத் தொடங்கினர் அன்ருட்ப் பிரச்சிகனகக்ா அலசி ஆராய்ந்து அறிவு தரும் ஆன் றக் கல்வியைப் பரப்பித் 'தொண்டாற்றக் கந்திஞர், "திண்ணியராக இருந்தால் ன்ன்னியதை எய்தலாம்' என்ற வள்ளுவர் வாய்மொழிக் கேற்ப், அகில உல்க்க் கல்விதனே ஆய்வு செய்யும் பணியினை

ஒலிம்பிக்-5

'