பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பூவை எஸ். ஆறுமுகம்

 போகிறாளா? அக்காவிற்கு எப்பொழுதும் கோள் சொல்லும் புத்தி தான்.

முகுந்தன் பயத்தால் நடுங்கினான். அப்பா என்ன செய்வாரோ, என்ன கேட்டாரோ, என்று பயந்தான்.

“முகுந்தா வீட்டுப் பாடத்தை ஒழுங்காக எழுதி விட்டாயா?” என்று கேட்டார் முகுந்தனின் அப்பா கார்த்திகேயன்.

“இன்னும் எழுதி முடிக்கவில்லை. அதற்குள் அக்கா கூப்பிட்டுக் கொண்டு வந்துவிட்டாள்” என்றான் முகுந்தன்.

“அப்பா! நான் நேற்று கேட்ட...?” என்று பேச்சை நிறுத்தினாள் விநோதினி.

“நினைவிருக்கிறது விநோதினி, இன்றைக்கு மறக்காமல் வாங்கி வருகிறேன்” என்றார் கார்த்திகேயன்.

விநோதினி அப்பாவிடம் என்ன கேட்டாளோ என்று யோசித்தான் முகுந்தன்.

கார்த்திகேயன் கடிகாரத்தைப் பார்த்தார். ஆபீஸ் போகமணி ஆகிவிட்டது. “எனக்கு நேர மாச்சு.விநோதினி முகுந்தனைப் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு நீ போ” என்று தன் மகளுக்குக் கூறி விட்டுப் புறப்பட்டார் கார்த்திகேயன்.