பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

37

தனித்தனியே இளைஞர்கள் இருவரும் வாள் பரிசோதனைக்கு இலக்காகினர். என்ன ஆச்சரியம்! இருவருமே அல்லவா வெற்றி பெற்றுவிட்டிருக்கிறார்கள்! ‘பராசக்தி துணை!’ என்ற எழுத்துக்களை எவ்வளவு லாகவமாக வாள் முனையில் அடுக்கி விட்டார்கள்...!

மன்னர் மன்னன் தேவி பராசக்தியின் படத்தின் முன் மண்டியிட்டு அழுதார். “பராசக்தி! இவ்விருவரில் யார் என் உண்மை மகன்?...சொல், இல்லையேல் என் உயிரை எடுத்துக் கொள்...”

“அப்பா...” என்று புதிய இளைஞன்ஓடினான்

“வேந்தே” என்று இளவரசக் கோலத்தில் இருந்த இளைஞன் ஓடினான்.

“வேந்தே! உங்கள் உண்மை மைந்தன் இதோ இவரேதான்...! உங்கள் பணியாள் ரவிசேகரனை அறிவீர்களல்லவா? அவனேதான் இந்த ஏழை. அன்று கிழவன்போல வந்து உங்கள் வேலைக்காரனாகி, பிறகு உங்கள் திருக்குமரரின் ஒவியத்தைத் தீட்டி, பிறகு உங்கள் மைந்தன் என்று போலிவேஷம் புனைந்ததெல்லாம் இதே அடிமை தான் பிரபோ! உங்கள் மைந்தனின் உருப் போல அசலாக என் தோற்றமும் அமைந்திருப்பதை அறிந்தேன். படைப்புப் புதிர் இது! என் உண்மைத் தோற்றத்தினால் ஏதாகிலும் விபரீதம் விளையக் கூடும் என்று கருதியே, முதலில் கிழவனாக மாறு

ஒ-3