பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பூவை எஸ். ஆறுமுகம்


திட்டத்தை உங்கள் மண்ணான இந்தப் பூவை மாநகர்க் கிராமத்திலும் நடைமுறைப் படுத்தவே நான் தற்போது அரசு முறையிலே இங்கே வருகை தந்திருக்கிறேன்! - உங்களிலே இதுவரையிலும் எழுத்தறிவு பெறாமல் இருக்கின்றவர்கள் எல்லோரும் இத் திட்டத்தில் பங்குகொண்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் செய்திடவேண்டிய கடமைப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்யும்படியும் அதன் விளைவாக அரசின் முதியோர் கல்வித் திட்டத்தை வெற்றியடையச் செய்யும்படியும் உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறேன்!-இப்போது, இந்த வயது வந்தோர் கல்வித் திட்டத்தில் சேர விரும்புபவர்கள் தலை நிமிர்ந்து முன் வரலாம்!”

இவ்வாறு ஆசிரியர் ஆத்மநாதன் பேசி முடித்தார்.

கூட்டத்தில் சலசலப்பு பரபரப்புடன் எழுந்தது.

காந்திராமன் சுற்றிச் சூழ வெகு ஆவலோடும் ஆர்வத்தோடும் நோக்கினான்!-வயது வந்தோர் நல்லறிவு பெறுவதற்கான அரசாங்கத்தின் பயனுள்ள இந்தத் திட்டத்திலே பங்குபெற என்னுடைய அப்பா கலந்து கொண்டால், எவ்வளவு சிறப்புடையதாக வாழ்க்கை அமையும்!--அப்பாவுக்கு இந்த விவரம் தெரியுமோ, தெரியாதோ?--