பக்கம்:ஓங்குக உலகம்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

ஓங்குக உலகம்


பெற்றார். அங்கேயும் கண்டேன். முடிவில் வாழ்வையே தமிழ்நாட்டு-இந்திய நாட்டுத் தொண்டுக்கெனவே தியாகம் செய்த நல்லவர் உயிர் பிரிந்தது. அவர்தம் பல்வகைத் தொண்டுகளைப் பற்றி விரிக்கின் பெருகும். அவர் அரசாங்கத்தில் ஏற்காத துறை இல்லை; ஆற்றாத ஆக்கப் பணிகளில்லை; எனினும் விரிவஞ்சி அமைகின்றேன். அவர்தம் திருப்பெயர் என்றும் வாழ்க என வாழ்த்தி அமைகின்றேன்.

பேச்சு- 1987


15. அறிஞரும் ஆவர்

மாண்புமிகு தமிழக முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன், அவர்கள் இதுவரையில் எந்தத் தலைவரும் பெற்றிராத பெரும் புகழைப் பெற்றுவிட்டார். மறைந்தும் என்றும் வாழும் ஏற்றம் பெற்ற அவரை நான் நாற்பது ஆண்டுகளாக அறிவேன். யாரிடமும் நெருங்கிப் பழகும் தன்மையோ அன்றி அவ்வாறு பழகுவதை மற்றவர் தெரியப் பறை சாற்றுவதோ என் வழக்கமில்லை யாதலால் எங்கள் உறவு பற்றிப் பலருக்குத் தெரியாது. அவரை நேரில் கண்டு பேசியறியாத-நன்கு புரிந்துகொள்ளாத எத்தனையோ பேர் அவரைப் பற்றிப் பேசினார்கள். பலப்பல பண்புகளைப் பாராட்டினார்கள். அவர்கள் அனைவரும் அவர்தம் பிரிவினை எண்ணி உளமுருகிப் பேசியவை என்முன் நிழலிடுகின்றன.

1947இல் நான் எங்களூர் வாலாஜாபாத்தில் உயர் நிலைப்பிள்ளியினைத் தொடங்கத் திட்டமிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/103&oldid=1135823" இலிருந்து மீள்விக்கப்பட்டது