பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 13 ராஜு இடம் :- பாதை. காட்சி - 4 இருப்போர்:- ராஜு, கோபால், புதியவர். [கிண்டி ரேஸ் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டு. ராஜு பேசுகிறான். கோபால் கவலையுடன் இருக்கிறான்.] கோபால்! நாளைக்குக் கட்டாயம் தக்தீர், வின் அடிக்குது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டு. இந்தத் தடவை, வின் கட்டாயம். கோபால் : ராஜு! உன் பேச்சைக் கேட்டுப் போனவாரம் தக்தீர் மேலே ஆறு வின் டிக்கட் எடுத்தேன். (பெருமூச்சு) ராஜு (சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு) அதற்கு என்னடா செய்வது? இந்தத் தடவை கட்டாயம். தக்தீர்தான் அடிக்கும். சந்தேகமே வேண்டாம். (இதைக் கேட்டுக்கொண்டே அங்கு வந்து சேர்ந்த புதியவர்) புதியவர் : யாரப்பா உங்களை ஏமாற்றிவிட்டது? தக்தீர், பிளேசுக்குக்கூட வராதே. இந்தத் தடவை வின் அடிக்கப் போவது நாட்டிமெயிட் யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். நாட்டி மெயிட் ஜெயிக்கும் என்று நமக்கு, ஜாக்கி ஜான்சன் சொன்னான். நமக்கு அவன் ரொம்பச் சிநேகிதம். கோ: ஏன் சார் ! நாட்டி மெமிட் கட்டாயம் வருமா? நம்பிக் கட்டலாமா சார். சார்! எனக்கு இதுவரையிலே 500 ரூபாய்க்குமேல் நஷ்டம் சார். ஒயிப் கழுத்துச் செயினைக் கூட மார்வாடியிடம் வைத்துவிட்டேன் சார். இந்த ரேசிலே ஜெயிக்காவிட்டா. என்பாடு ரொம்பத் திண்டாட்டமா போயிடும் சார். பு: நமக்குந்தான் சார் நஷடம். ஆனா, இப்ப நான் சொன்னது இருக்கே. இது நிச்சயம். நாட்டிமெயிட் மேலே