பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 அறிஞர் அண்ணா [அடடே! அதுபோல இப்பவேண்டாம்' என்று பலரும் கூற, கும்பல் கலைந்து போகிறது.] இடம் : பாதை. காட்சி - 7 இருப்போர்: கள்ளன், கான்ஸ்டேபிள்கள். [ஒரு கள்ளனைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகிறான் ஒரு கான்ஸ்டேபிள். எதிரே வரும் நண்பன் கான்ஸ்டேபிளைப் பார்க்கிறான்.] ந : ஏன் சார்! எங்கே திருடினான்? கா: இவனா? பலே பக்கா! கன்னம் வைச்சிக்கிட்டே இருந்தான். கண்டுபிடிச்சு இழுத்துவர்ரேன். நிலவுகூட இருக்குது,பய, யாருமில்லாத வீடா பாத்து தோட்டத்துச் சுவரைத் தாண்டி உள்ளே போயி, கன்னம் வைக்கிறான். ந: யாரு வீட்டிலே? கா : அந்த வேடிக்கையை ஏன் கேக்கறே போ. கள்ள பார்ட் குள்ளப்ப ஆசாரி இல்லே, அவன் வீட்டிலே கன்னம் வச்சான் பய ந:பலே பேர்வழி தான். கள்ளபார்ட் குள்ளப்ப ஆச்சாரி, நூலேணி போட்டு ஏறுவது, கன்னம் வைக்கறது, சுவரைத் தாண்டறது இதெல்லாம் நாடகத்திலே செய்து காட்டினா, இவன் கள்ளபார்ட் வீட்டிலேயே கன்னம் வைச்சானா? கா : இந்த நிலாவிலே, அவங்கவங்க எவ்வளவோ தமாஷாப் பொழுது போக்கறாங்க. நம் தலை எழுத்தைப் பாரு. இந்தமாதிரிப் பயலைப் பிடிச்சி இழுத்துக்கிட்டுப் போறதா இருக்கு, வருகிற வழியிலே பூந்தோட்டத்திலே,' என்னா அழகாத்தான் இருக்கு தெரியுமா? ந: அதுவா! இந்த நிலாக் காலம்னாலே, பூந்தோட்டத்துப்