பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 அறிஞர் அண்ணா நிலா மாதிரியா விளக்குப் போடச் சொல்டி பார்க்கலாம். ஏழையின் குடிசையிலே. நிலா வெளிச்சம் தெரியுது பாருடி அதுகிட்ட பணக்காரன் வீட்லே இருக்கே எலக்ட்ரீ விளக்கு, அது என்னாடி செய்யும். நிலாதாண்டி, ஏழை பணக்காரன் என்கிற வித்யாசம் பார்க்காமல் இருக்குது. பாரு. மாரி! எம்மா அழகா இருக்கு... மா : அழகாத்தான் இருக்குது. நான் போயிட்டு ஓடியாந்துடறேன். சரி, என்ன பணம் வாங்கிவந்தே, எடு. [புருஷன் பணத்தைத் தருகிறான்.] என்னா இது? எழவாப்போச்சி, ஒத்தே ரூபாயைக் குடுத்தா எதுக்குன்னு ஆகும். மள் : (அதைக் கவனியாமல்) ஒத்தே ரூபாயா? ஓங்க அப்பன் நோட்டு நோட்டா நீட்டறானா? போடி! இந்தப் பணத்தை வாங்க அந்தப் பயகிட்ட நான் பல்லைக் காட்டினது உனக்கென்னா தெரியும்? மா : அப்பாணையர்ச் சொல்லு. ஒத்தே ரூபாதானா கொடுத்தாரு? மன்: ஆமாண்டின்னா... மா : தெரியுதே இலட்சணம். சொல்லுவானேன். நீங்க நின்ன நிலையிலே ஆடறது சொல்லுதேன்னேன். ஐஞ்சு ரூபா வாங்கி அனியாயமாக் குடிச்சிப்போட்டு என் அடிவயத்திலே நெருப்பைப் போடறியே! மள் : சிச்சி! ஐஞ்சுமில்லை, பத்துமில்லே. ரெண்டரைடி ரெண்டரே. மா : சாராயக் கணக்கையாக் கேட்டேன்? மள்: சீ! ரெண்டரை ரூபா கொடுத்தாருடி எசமான். மா : மிச்சப் பணம் எங்கே? என்னாங்க அன்யாயம். ஒண்ணரை ரூபாய்க்கா குடிச்சித் தொலைக்கணும். குடித்தனம் உருப்படுமா? மன் : செ. கழுதே! எவண்டி ஒண்ணரைக்கும் 'இரண் டரைக்கும் குடிப்பான் ஓங்க அண்ணனா ஈட்டிக்காரன்?