பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு மா : ஈட்டிக்காரன் கடனைக் கொடுத்துவிட்டிங்களா? மன் : விடுவானா? எட்டணா போயிட்டான். 27 தட்டிக்கிட்டுப் மா: போவுது, அப்பிடின்னாலும் இன்னும் ஒரு ரூபா? மன் : ஒரு ரூபாயா? முழுங்கிட்டேன். போயேன். பசி யானா பசி, உயிர் துடிச்சுது, கொஞ்சம் நாஸ்தா பண்ணேன். மா : ஒரு ரூபாய்க்கா? மன் ஏண்டி, எனக்கென்ன வயறு சாலா? ரெண்டணாவுக்குத் தின்னேன்', மா : மிச்சம்? மன் : மிச்சம் இருக்குது. மா : எங்கே? மன் : இருக்குதுன்னா விடுவயா, சும்மா மனுஷனைப் பிடுங்கித் தொலைக்கறயே. மா : எங்கேன்னு சொல்லேன். மன் : முடியாது போடி. சொல்ல முடியாது. காட்டவும் முடியாது. மா : இருந்தாத்தானே காட்ட. அந்த எழவெடுத்த சாராயத்தை ஊத்திக்கிட்டு வந்தாச்சி. அடிவயத்தையே கலக்குதே, அடிக்கிற நாத்தம். மன் : நாத்தமா அடிக்குது? இவ உடம்பு சென்டு! நாத்தமாடி அடிக்குது நாயே! எண்டி! நான் என்ன ஜெமீன்தாரன் வீட்டு மருமவனா நாத்தமில்லாத ஒசத்தி சரக்கு சாப்பிட [மாரி சிரித்துவிட்டு வெளியே போகிறாள்.] 'காட்சி - '11 இடம் :- பூந்தோட்டம். இருப்போர்:- டாக்டர், சுசீலா, சிறுவர்கள். [டாக்டர். குழந்தைகளை, தோளிலும் கால் மீதுமாக ஏற்றிக்கொண்டு சர்க்கஸ் வேடிக்கை செய்கிறார். மாரி வருகிறாள்]