பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 அறிஞர் அண்ணா க: என்ன தொல்லை இது! இது ஒரு மாதிரி பைத்யமோ? சு: உனக்குக் காதல் தெரியுமா? க தெரியாதே. சு: கன்னம் வைப்பது, கதவை உடைப்பது, காதை அறுப்பது இதுமட்டும்தான் தெரியுமோ? என்னப்பா இது. களவாடினால் உனக்குப் பொருள் கிடைக்கும். வாழ்க் கைக்குப் பொருள் மட்டும் போதுமா? காதல் தெரியா விட்டால் நீ என்ன செய்யப்போகிறாய் களவாடிய பொருளை எல்லாம் வைத்துக்கொண்டு? க: எனக்கு மயக்கம் வருகிறது. க : இவ்வளவு அழகான நிலவில், உனக்குக் களவாடப் போகலாம் என்று புத்தி பிறந்ததே தவிர, வேடிக்கையாக உலாவலாம்.ஆனந்தமாகப் பாடலாம் என்று தோன்ற வில்லை. ஏன்? காதல் என்றால்தான் தெரியாது என்கிறாயே! க: நான் போகிறேன். நீ ஏதேதோ பேசுகிறாய். உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. பயமாகவும் இருக்கிறது. சு: நேற்று நீ வந்திருந்தால் நானும்கூடத்தான் பயந்து போயிருப்பேன். இன்று உண்மையிலேயே பரிதாபப் படுகிறேன். ஏன் தெரியுமோ? நீ உன் முழுத் திறமையைக் காட்டினாலும் என்னை என்ன செய்ய முடியும்? சாகடிக்க முடியும். நான்தான் சாகத் துணிந்து விட்டேனே! இனிப் பயம் என்ன? சுடு இஷ்டமிருந்தால். க: இல்லை! நான் போகிறேன். ஏதோ சதி நாடக மாடுகிறாய். என்னை ஏய்க்கப் பார்க்கிறாய். நான் கீழே இறங்கிப் போகும்போது கூச்சலிட்டு என்னைச் சிக்க வைக்கலாம் என்று பார்க்கிறாய். நான் ஏமாறமாட்டேன். அப்படியே அந்த நாற்காலியில் உட்கார். சு: பிறகு? க: உன் வாயில் துணி அடைத்து.. சு: வழக்கமாக நடப்பதுதான். வாயில் துணி அடைத்து என்னை நாற்காலியோடு சேர்த்துக் கட்டிவிடப் போகிறாய். அதுதானே !