பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஓர் இரவு 47 சு : நடக்கட்டும். ஆனால் ஒன்று. நான் இடையிடையே வேண்டாம். அடிக்காதே, என்று கெஞ்சுவேன்: சட்டை செய்யாததுபோல நடந்து கொள்ள வேண்டும். க : சரி. சுசிலா ஆத்திரத்தில் நான் எதையும் மறந்து விடுவேன். அந்தச் சமயம் இந்தத் துப்பாக்கி என்னிடம். இருப்பது ஆபத்து. இதை நீ வைத்துக்கொள். சு: ரத்தினம்! நீ கள்ளனாசுக் காலந்தள்ளுகிறாயே தவிர. உண்மையிலேயே என்னைப்போல ஒரு தங்கை இருந்திருந்தால் உத்தமனாகி இருக்கலாம். எவ்வளவு நம்பிக்கையுடன் துப்பாக்கியை என்னிடம் கொடுக்கிறாய். க: தான் மறுபிறவி அல்லவா எடுத்திருக்கிறேன் சுசீலா! சாகசமாகப் பேசி என்னைச் சாகடிக்கவே நீ தந்திரம் செய்து துப்பாக்கியை வாங்கிக் கொண்டதாகவே இருக்கட்டும். சகல சுகமும் இருக்கும்போது, காதலுக்காக உயிரைவிடத் துணியும் ஒரு உத்தமியின் கரத்தால் மாள்வது, ஊராரிடமோ, ஊர் ஆள்வோரிடமோ உதைபட்டுச் சாவதைவிட மேலான தல்லவா? சு: ஒரு கள்ளன் காட்டும் இரக்கம்கூடக் காமுகனிடம் கிடைப்பதில்லை. க: ஆமாம். உன்னை வதைக்கும் அந்த வஞ்சகன் இப்போது அல்லது இன்னம் கொஞ்ச நேரத்தில் இங்கு வருவான் என்று எப்படித் தெரியும் உனக்கு? க: (கேலியாக) அதுவா? தோட்டத்துச் சுவரைத் தாண்டி. கயிறு போட்டு ஜன்னலில் மாட்டி. உள்ளே தெரிந்ததல்லவா உனக்கு? க: ஆமாம், அது என் தொழில், பழக்கம். வரத் சு: கள்ளன் எந்த வீடும் நுழைவான். காமுகன் கதியற்ற கன்னிமாடமாகப் பார்த்து நுழைவான் பெண்களால் அவ்விதமான ஆண்களின் சுபாவத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.. க: அப்படியா! சு: மேலும் நான் சம்மதித்துவிட்டேனல்லவா. அந்தச் சண்டாளன் அதே நினைப்பிலே இருப்பான். தூக்கமும்