இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
அந்தப் பொம்மை இருக்கும் வரையில் மறுபடியும் அந்த மாளிகைக்குப் போகலாம் என்ற நம்பிக்கை உண்டாயிற்று. தங்கவேலின் நம்பிக்கை வீண்போகவில்லை. ஒவ்வொரு நாளும் அவன் தூங்கும்போது அந்தக் கிளிப்பொம்மை அவனை எங்கெல்லாமோ அதிசயமான இடங்களுக்குக் கொண்டுபோவதாக அவன் கனவு கண்டான்.
அது முதல் பாட்டி புதிய புதிய கிளிப்பொம்மைகள் செய்து விற்கும்போது அவன் முன் போலக் கவலைப்படவில்லை. சந்தோஷமாகவே ஊரிலுள்ள குழந்தைகளுக்கு அவனே அந்தப் பொம்மைகளை எடுத்துக் கொடுப்பான்.