இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17
களையெல்லாம் விரித்துக்கொண்டு தண்ணீருக்கு மேலே நிற்கும். வேறு தாமரையே கண்ணில் படாது. அந்த நாட்டு ராணி அந்த நீலத் தாமரையைப் பறித்துக்கொள்ளுவாள்.
இப்படி இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று காலையில் பார்த்தால் அந்தக் குளத்தில் அன்று மலரவேண்டிய நீலத் தாமரைப் பூவைக் காணவில்லை. யாரோ ரகசியமாக வந்து அதைப் பறித்துக்கொண்டு போய்விட்டார்கள்.
ஒ.கி.-3