பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

75



இலங்கைத் தமிழர்க்கு என் கண்ணிர்!

இலங்கையில் தமிழ மக்கள்
எத்தனை யோ, நூற் றாண்டாய்
விலங்குக ளோடும், தீய்க்கும்
வெயிலொடும் குளிரினோடும்
கலங்கிய கண்ணீ ரோடும்
கடுமையாய் உழைத்து ழைத்துப்
புலங்களைத் திருத்தி னார்கள்!
புதுப்புலம் விளைவித் தார்கள்! 1


காடுகள் அழித்து நல்ல
கழனிகள் தோற்று வித்தார்!
மேடுகள் குழிகள் எல்லாம்
சமநிலை மேவச் செய்தார்!
மாடுகள் போலு ழைத்தும்,
மண்வளம் பெருக்கி வாழ்ந்தும்,
நாடுகள் அற்ற-வாழ்க்கை
நலமற்ற-குடிக ளானார்! 2


நினைக்கையில் உயிரும் நெஞ்சும்
நெருப்பாகிக் கனலும்! நல்ல
பனைக்கீடாய் உழைப்பைத் தந்தார்;
பயன்தினை யின்றிப் போனார்!
வினைக்கவர் உரியர் என்றால்,
விளைவுக்கும் உரியர்; ஆனால்,
மனைக்கொரு நிலமும் இன்றி
அடிமையாய் மாள்கின் றாரே! 3


கல்விக்கங் குரிமை யில்லை;
சிங்களம் கற்றல் வேண்டும்! .
செல்வத்தைச் செய்வா ரேனும்
செழிப்புள்ள வாழ்க்கை யில்லை!
பல்வளம் பெருக்கு கின்ற
பாட்டாளி மக்க ளேனும்
நல்வள வாய்ப்பு மின்றி,
நலிவோடு வாழ்த லுற்றார்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/85&oldid=1163649" இலிருந்து மீள்விக்கப்பட்டது