86
ஓ, மனிதா!
சீட்டுத் திட்டம் என்று ஒரு திட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து மாதா மாதம் பத்து லட்சம் பதினைந்து லட்சம் என்று பரிசு வைத்து லட்சக்கணக்கானவர்களை ஏமாற்றியாவது ஒரு சில லட்சாதிபதிகளை உருவாக்கி வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் தமிழ் நாடு அரசை முந்திக் கொண்டுவிட்டன மற்ற மாநில அரசுகள். அவை ‘மாதத்தில் சில லட்சாதிபதிகளை’த்தானே உங்களால் உருவாக்க முடியும்? இதோ பாருங்கள். நாங்கள் ஒவ்வொரு வாரமும் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் கூட பல லட்சாதிபதிகளை உருவாக்கி வருகிறோம்’ என்று உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
ஆக யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதோயில்லையோ. அதிர்ஷ்டத்துக்கு இப்போது மேல் அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்கிறது!
அந்தக் கதையை விட்டு விட்டு என் கதைக்கு வருவோம். நீங்கள் நினைப்பது போல் நான் என்ன அவ்வளவு தந்திரசாலியா? அவ்வளவு பெரிய புத்திசாலியா? கிடையவே கிடையாது. அந்த விஷயத்தில் நீங்கள் என்னை எப்போதோ தூக்கியடித்து விட்டீர்கள்!
பட்டப்பகலில் பட்டுப்புடவை வெளியே கட்டப்பட்டுக் காய்ந்து கொண்டு இருக்கும். கண்ணில் தீப்பொறி பறக்கக் கணவர் ஒருவர் வருவார். ‘ஊரிலே திருட்டுப் பயல்கள் அதிகமாகி விட்டானுங்க, வெளியே பட்டுப் புடவையை காய வைக்காதேடி, காய