பக்கம்:ஔவையார் கதை.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் கதை

27


நாஞ்சில்மலை வள்ளுவனை நாவாரப் பாடிநின்றார்
ஆய்ந்துபல நாள்நடந்து அரசர்களைக் காணலுற்றார்
கடையெழு வள்ளல்களில் கருத்தினிய வள்ளலவன்
படைமிகு மன்னனவன் பார்புகழ் அண்ணலவன்
பறம்புமலை யாளுமவன் பசித்தவர் குழுமவன்
அறம்பல செய்யுமவன் ஆருயிர்கட் கையனவன்
பாரியெனப் பாரவர்கள் பாராட்டும் பண்பனவன்
ஓரறிவு கொள்ளுயிர்க்கும் உவந்தருள் வள்ளலவன்
முல்லையிளங் கொடியினுக்கு முழுமணித் தேரளித்தான்
தொல்லையவன் புகழதனைச் சொல்லாத நூல்களில்லே
இத்தகைய வள்ளல்தனை இயலவ்வை அடைந்திட்டார்
வித்தகங்ற் செல்வியினை விழைந்துவர வேற்றிட்டான்
பரிசுகள் பலவழங்கி அரியதமிழ் கேட்டிட்டான்
அரியவரைப் பிரிவதற்குப் பெரிதுமே வருந்தியிட்டான்.
பலகாலும் வந்தவ்வை பைந்தமிழை யூட்டிகின்றார்
அலகில்லா அன்புடனே ஒருசமயம் அடைந்திட்டார்
வந்தவர்க்குச் சிந்தைமகிழ்ந் தரும்பரிசு வழங்கிட்டான்
புந்திமகிழ்ந் தவ்வையாரும் புறப்பட்டார் வழிநடந்து
காட்டுவழிச் செலும்போது கள்ளர்பலர் மறித்திட்டார்
கூட்டாக அவர்பொருளைக் குலைந்திடக் கவர்ந்திட்டார்
பரிசுகளை இழந்திட்ட பசுந்தமிழ்ச் செல்வியவர்
பெரிதுமனம் வாடிமிகப் பெட்புறுபாரியைக் கண்டார்
பேரறமே உருவான பாரிவள்ளால் நின்னுட்டில்
சாரும்வழி தான்மறித்துத் தந்தபொருள் பறித்திட்டார்
உன்னுடைய திருநாட்டும் உள்ளாரோ கள்ளர்பலர்
என்னவியப்பு! ஐயையோ! ஈதோ உன் னைட்சிமுறை!
இந்தவிதம் முறையிட்ட செந்தமிழர் தம்தவத்தை
வந்தித்து வாழ்த்தியவர் சிந்தையது குளிர்வித்தான்
கலைவாணித் திருவுருவே! கற்றவர்கள் நற்றவமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/27&oldid=507917" இலிருந்து மீள்விக்கப்பட்டது