பக்கம்:ஔவையார் கதை.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஒளவையார் கதை


எண்ணற்ற கனிநிறை விருந்து
எண்ணவே தித்திக்கும் விருந்து
பண்ணுற்ற தீஞ்சுவை விருந்து
பண்பான அன்புமன விருந்து
விருந்தினை அருந்திட நிறைந்தார்
வேல்வேந்தர் எண்ணற்ற பேர்கள்
பொருந்தினர் புலவர்கள் பல்லோர்
டொற்புடைய வள்ளல்கள் நல்லோர்
அடைந்தனர் செல்வர்கள் பல்லோர்
அமர்ந்தனர் விருந்தறை யதிலே
மிடைந்திட்ட இலைமுன் னிருந்தார்
மேலாக ஒரன்பர் நின்றார்
இலைபோட இடமங்கே யில்லை
இருந்திட அவர்க்கிடமு மில்லை
நிலைகண்ட சேரமான் எங்கும்
நீள்விழிப் பார்வையது செய்தான்
நின்றிட்ட புதியவரை அங்கே
இருத்திட நினைந்துவழி கண்டான்
நன்றுள்ள ஒளவையரு குற்றான்
நற்கரம் பற்றியெழுப் பிட்டான்
"ஒளவைவா ராய்" என்று அழைத்தான்
அப்புறம் உண்போமென்று உரைத்தான்
செவ்வையாய் நின்றவரை ஆங்கே
சேர்த்திலை முன்னமரச் செய்தான்
உரிமையால் பேரன்பு செய்த
உத்தமன் சேரமான் உள்ளம்
பெருமையது பெருமையது என்றே
பேரன்பு கொண்டுபோற் றிடுவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/30&oldid=507920" இலிருந்து மீள்விக்கப்பட்டது