பக்கம்:ஔவையார் கதை.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளவையார் கதை

35


பாட்டு

திருக்கோவ லூரை யாளும்
தெய்வீக ! சொல்லக் கேளாய்
உருக்கோல மிக்க மாதர்
உத்தமக் கற்பின் மாதர்
பேரருள் வள்ளல் பாரி
பெற்றாற் றவத்து மாதர்
பாரியோ மறைந்துவிட்டான்
பாவையர் கலங்கி நின்றார்
அங்கவை சங்கவை என்பார்
அன்புள்ள இன்ப நல்லார்
மங்கையரை மணந்து கொள்வாய்
மற்றவரை ஏற்றுக் காப்பாய்
தெய்வீகன் ஏது சொல்வான்
தேர்தமிழ்த் தாயே! கேளீர்
பெய்மாரி யன்ன பாரி
பேரரசர் மூவர் பகையே
இன்னவரை ஏற்பே னாயின்
இன்னல்கள் மூவர் செய்வர்
மன்னுபுகழ்ச் சேரன் சோழன்
மதிவழியன் துன்பம் சேரும்
அஞ்சுவேன் என்று மறுத்த
அன்பனுக் கவ்வை சொல்வார்
அஞ்சற்க மன்னர் மூவர்
அவரையான் அழைப்ப னென்றார்
மூவர்க்கும் ஒலை வரைந்தார்
முன்னவர்க் கனுப்பி விட்டார்
யாவரும் வருக என்றார்
அரியதிரு மணம் முடிப்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஔவையார்_கதை.pdf/35&oldid=507924" இலிருந்து மீள்விக்கப்பட்டது