பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

121



அந்த மலையிடத்தே மேகத்திரள்கள் வந்து படிந்துள்ளதான ஒரு பெரிய மாளிகை ஒன்றின் மேல்தளத்திலே ஒரு சாரிகை வந்து நின்றாள்.

ஒயிலாக வந்து நின்ற அவள் தன்னுடைய கொண்டையை அவிழ்த்துவிட்டுத் தன்னுடைய தலைமயிரை அம் மாளிகை இடத்தில் இருந்தபடியே கோதவும் தொடங்கினாள்.

'அவளிடத்தே யான் நெஞ்சினைப் பறிகொடுத்தேன்!'

உழக்கு என்பது கால்படி; உரி அரைப்படி; மூவுழக்கு முக்காற்படி; நாழி படிக்கு ஒரு பெயர். அனைத்தும் கூட்டினால், முந்நாழி ஆகும்; மூன்று நாழி மூன்று நாழிகையும் ஆகும். காலை மூன்று நாழிகை அளவில் எனலாம். மேகம் தோன்றத் தன் தோகையை விரித்து ஆடத் தொடங்கும் மயில், அதனைக் குழல் கோதும் அவளுடன் உவமித்தனர்.

96. புறங்காட்டல் தகுமோ?

ரு காதலன் தன் அன்புக் காதலியை நாடி ஆவலுடன் வருகின்றான். குறித்த காலத்து வாராது போயின. அவனுடைய பிழையினை நினைத்து அவள் வருந்தியிருந்தனள். அதனால், அவள்மனத்தே கூடலின் விழைவைக்காட்டிலும் ஊடலின் சினமே மிகுதியாக இருந்தது. அவனும் அதை உணர்ந்தான். அவளுடைய ஊடலைத் தெளிவித்துக் கூடுவதற்கான பல முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தான்.

இந்நிலையிலே, இரவு வேளையும் வந்தது. இருவரும் பஞ்சணையிற் சேர்ந்தும் இருந்தனர். அவன் ஆர்வமுடன் அணைக்க, அவள் அவன் கைகளை ஒதுக்கியவளாகப் புறமுதுகை அவன் பக்கம் காட்டியவளாகப் படுத்துக் கொள்கிறாள். அப்போது, அவன் அவளைத் தெளிவிக்கக் கூறுகின்ற துறையிலே அமைந்த செய்யுள் இது.

அறங்காட் டியகரத் தைவே, லசதி யகன்சிலம்பில்
நிறங்காட்டுங் கஞ்சத் திருவனை யீர்முக நீண்டகுமிழ்த்
திறங்காட்டும் வேலும் சிலையும் கொல்யானையும்
தேருங்கொண்டு
புறங்காட் டவுந்தகு மோசிலைக் காமன்தன் பூசலிலே?

“ஐவேல் அசதி, அறம் இதுவென அறத்தின் தன்மை தோன்றுமாறு வழங்கிக் காட்டிய கரங்களை உடையவன். அவனுடைய அழகியதான இம் மலை நாட்டிடத்தே, எனக்கு முதுகினைக் காட்டியபடியே படுத்திருக்கும் பெண்ணே! தாமரையிடத்துத் தங்கியிருக்கும் திருமகளைப் போன்றவளே! அவள் போன்ற முகமும், அதனிடத்தே நீண்ட குமிழ மலரைப்