126
கங்கா
நான் வளர்றது எனக்கே தெரியறது. உள்ளே சதையின் குறுகுறுப்பு உடம்பு தாங்கல்லே.
நான் கண்ணாடியில் என்னைப் பாக்கறப்போ ஒரொரு சமயம் எனக்குத் தோணும் :
இப்பொ கண்ணுக்குத் தெரியறமாதிரி ஒரு தலை, ஒரு மூக்கு, ரெண்டு கண், ரெண்டு கை, ஒரு வயிறு, இரண்டுகால்... ... இது மாதிரி, இது மாத்திரந்தானே பார்க்க முடியறது ? ஆனால், இந்தத் தோலுக்கடியில் இன்னும் எத்தனை கண், மூக்கு, காது? இன்னும் இது
வரைக்கும் உலகத்திலிருந்து மானம் வரைக்கும் கண்ணால் கூடக் காணமுடியாமல், இன்னும் பேர்கூட வைக்காமலே, இன்னும் என்னென்ன. எத்தனை
எத்தனை முளைச்சிருக்கும் ?
பூவுக்குள்ளே இதழ் இதழாய் மரத்துக்குள்ளே முண்டும் முடிச்சுமாப்போல் உடம்புக்குள்ளே, தோலின்
கெட்டிக்கடியிலே இன்னும் என்னென்ன ? எத்தனை எத்தனை ? இதைப் பார்த்துத் தெரிஞ்சுண்டுடனும்- ஆத்திரம் மீறிப் போச்சு. ஒரு சமயம் அப்பா கூடிவரம் பண்ணிண்டு எறிஞ்சுட்ட ப்ளேடாலே நானே கட்டை விரலை வெட்டிண்டேன். .
ரத்தம் பீச்சியடிச்சுது.. பயமாப் போச்சு. காயத்தி லிருந்து கிளை கிளையா, கொடி கொடியாப் பிரிஞ்சு உள்ளங்கையில் வழிஞ்சுது. ஆனால், வேறொண்ணுந் தெரியல்லே. .
அம்மா பார்த்துப் பயந்து போனாள். 'லபலப'ன்னு: வாயிலடிச்சுண்டா. -