பக்கம்:கங்கா.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@籍”。邸。毋”伊”。 #41 "தெய்வப் பிறவின்னு கூடச் சொல்லுவேன். பசங் களாவது பட்டாசை விட்டு வைக்கறதாவது!" "உன் நாக்கில் வாக்குப் பேசறது; அவன் தெய்வமே தான்." "உங்கள் பேரனுக்கு என்ன வயலா ?” "இந்த தீபாவளிக்கு சரியா பத்து. தீபாவளி அன்னிக்கு பிறந்தான்." தேவலையே தனியா பிறந்தநாள் கொண்டாட வேண்டாம். உங்கள் வீட்டில் ம்ாத்திரம் இல்லை, ஊரே கொண்டாடும்னு சொல்லுங்கோ ...... எல்லாம் சரி, பேரனை விட்டுட்டு பட்டாசை நீங்கள் வெச்சிண்டிருந் தால் என்ன அர்த்தம் ? பயல் எங்கே? కణ్ణి “என்ன சும்மாயிருக்கேள், உங்கள் பேரன் எங்கே ?” கனன்ன பாட்டி அழறேள் ? கன்னத்தில் கண்ணிரா வழியறதே !” "பாட்டி மன்னிச்சுடுங்கோ என்ன உடம்பு இப்படி வெடவெடன்னு உதர்றதே! ... 'வயலாச்சோன்னோப்பா, சக்தி யி ல் ைல. ஒரு நினைப்பு கூட தாங்க முடியல்லே." . "என் மேலே சாஞ்சுக்கேரங்கோ. பரவாயில்லை. என் வயலில் உங்களுக்கு ஒரு பேரன் இருக்கலாம்-ஆ. அப்படித்தான் " "போன தீபாவளிக்கு இருந்தான்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கங்கா.pdf/155&oldid=764332" இலிருந்து மீள்விக்கப்பட்டது