லா. ச. ரா
153
நின்றாள். உடலெல்லாம் ‘வெடவெட வென்று உதறிற்று கடுஞ்ஜுரம்.
சற்று நேரம் எங்கேயோ ஞாபகமாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, குனிந்த தலையுடன் ஹரிஹரன் உள்ளே நடந்தான்.
"மூணு நாளாய்க் கண்ணைத் திறக்கக்கூட முடி யல்லே என் நினைப்பேயில்லை- உங்களையும் காணோம்-இந்த வீட்டில் இத்தனை பேரிருக்கான்னு: பேரேயொழிய, மல்லாந்த வாய்க்குத் தண்ணு ஊத்தற மனுஷாள் ஒத்தருமில்லே- நீங்களோ
ஹரிஹரனின் மூளை எங்கேயோ வேலை செய்து கொண்டிருந்தது.
"தாகமோ நாக்கை வறட்றது. அன்ன ஆகாரம் பச்சைத் தண்ணு மூணு நாளாயில்லை. இப்பொத்தான் எழுந்திருந்து ஒரு வாய்க் காப்பித் தண்ணு போட்டேன் அதுக்குள்ளே குளிர் வந்துடுத்து - அதை மாத்திரம் கொஞ்சம் கலந்து கொடுங்கோ-பாலைக்கூடக் காய்ச்சி
ஆயிடுத்து-"
ஹரிஹரன் இன்னமும் பேசவில்லை. இவ்விடத்து நினைப்பில்லாமலே, சின்ன அடுக்கில் டிகாக்ஷனை இறக்கி, அதன் மேல் பாலை விட்டுக்கொண்டே கஷாயம் திரிவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். பிறகு, ஒரு கலக்குக் கலக்கி, ஒரு தரம் தூக்கி ஆற்றி னான்-தன்னினைவு சுறீலென்று எழுந்தது.
மத்துக் கடைந்து பொங்கியது போன்ற அம்மன வெழுச்சியில் அவனுக்கென்ன தோன்றிற்றோ காப்பியை விசிறியடித்த வேகத்தில், எதிர்ச் சுவரில் பரவி விழுந்தது. அங்கிருந்து அது கோடு கோடாய் வழிவதை ஒரு