பக்கம்:கங்கா யாத்ரா தீபிகை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

________________

6. ஆறுமுகமுள்ளது சிவசுப்ரமண்ய ஸ்வரூபம், இதை யணியில் ப்ரூண ஹத்தியை நிவர்த்திக்கும். - 7. எழுமுகமுள்ளது ஆதிசேஷஸ்வரூபம், இதையணியில் கோஹத்தியையும், நினைத்தற்கரிய போர்க்களக் கொலைபாதகத் தையும் தீர்க்கும். 8. எட்டு முகமுள்ளது விநாயகஸ்வரூபம், இதையணியில் துலாபாரந்தூக்கிய பொருள் தான முதலாகிய தானம் வாங்குத லா லுண்டாகும் பாபத்தையும், பிறன்கைச் சோறுண்பதால் நேரும் பாதகத்தையும், ஊணிழந்திரப்பவர்கட்குக் கொடாததி னால் சம்பவிக்கும் பாதகத்தையும், சூரியன் முன்றோன்றும் பனியைப்போல் நீக்கும். -9. ஒன்பது முகமுள்ளது பயிரவர்ஸ்வ ரூபம், இதையணி யில் விடமுள்ளதக்ஷகன் முதலான சர்ப்பங்களை முன்ஜன்மத் திலடித்துக் கொன்றபாவத்தையும் நீக்கி முத்திக்கு வித்தாக்கும். - 10. பத்துமுகமுள்ளது உலகமுண்ட திருமால் ஸ்வரூபம், இதையணியில் இருபத்தேழு நக்ஷத்திரங்கள், நவக்கிரஹங்கள், பைசாசங்கள், பிரமராக்ஷதர்கள் முதலானவர்களா லுண்டாகும் பயமுதலான எல்லாக்குற்றங்களையும் போக்கும். -11. பதினொரு முகமுள்ளது ஏகாதசருத்ரஸ்வரூபம், வேதவிதிப்படி செய்கிற ஆயிரம் அஸ்வமேதயாக பலனுக்கும், கானங்களுக்குள் சிறந்த நூறாயிரங் கோதானங்களை யவைகளுக் குத் தக்க திரவியங்களுடன் தானஞ்செய்யும் பலனுக்கும் ஒப் பானதாகும். 12. பன்னிரண்டு முகமுள்ளது துவாதசாதித்ய, ஸ்வரூபம், இதையணியில் அஸ்வமேதமும், பசுமேதமும், பொன் மேரு தானமும் செய்தலால் பொருந்தும் பெரும்பேற்றைத் தராநின்ற பலனைக் கொடுக்கும். - 13. பதின்மூன்று முக முள்ள தாகில் காமசிந்தையிலாத மற்ற இஷ்டகாமியங்களையும், ரசவாதப் பொன்னையும், நன்மை களையும் பயப்பிக்கும். தாய், தந்தை, சகோதரர் இவர்களுக்குச் சதிசெய்த பாதகத்தை நீக்கும். 14, பதினான்கு முகமுள்ளது சிவம், சத்தியென்று மிரண்டு சொரூபம், இது முனிவர்களும், தேவர்களும், மற்ற யாவரும் வாழக்கடவை யென்று தொழும்படி வசியம் என்பதனைக் கொ டுத்துப் பின்பு ஊழிகாலத்திலு மழியாத மோக்ஷத்தைத்தரும். பதினான் குமுகமுள்ள உருத்திராக்ஷம் கிடைப்பது மிகவு மரிது. அப்படிக் கிடைக்குமாகில் குற்றமற்ற ஞானவான்கள்