இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காப்பிய உலகம்
71
தொண்டைச் செய்வார்களாக என்று அப்பாரதியாரின் வாக்கை உங்கள் முன் வைத்து என் உரையை முடித்துக் கொள்ளுகிறேன்:
‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமைஎனில் வெளிநாட்டோர்
அதைவணக்கம் செய்தல் வேண்டும்.’