பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 12 தாரையும் ஒப்பு நோக்கி அவர் படைத்துள்ள இந்தச் சிறந்த நால் நம்மனைவரின் பாராட்டுக்கும் கவனத்துக்கும் உரியதாகும். எனினும் இவ்விரு கவிஞர்களையும் பற்றி மேலும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்தாக வேண்டும், இந்தச் சிறு' நூலில் அதற்கு நிச்சயமாக இடமில்லை, 'எனி னும் இந்த இரு பெருங் : கவிஞர்களின் ஒட்டு மொத்த மான ஒற்றுமைப் பாங்கைத் தொட்டுக் காட்டுவதும், இ. ஜிப்பான வேற்றுமைப் பாங்கைச் சுட்டிக் காட்டுவதும் தான் இந்நால் மேற்கொள்ளும் பணியாகும். அதன்" மூலம் இந்தக் கவிஞர்கள் இருவரையும் அறிந்தவர்கள், அறிய விரும்புபவர்கள் ஆகிய இலக்கிய : அன்பர்களின் சிந்தனையைத் தூண்டி விடுவதே இந்நூலின் நோக்கம்.