பக்கம்:கடற்கரையினிலே.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இளங்கோவடிகள்

11


"நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நாடு"

என்று குறுகிய தமிழ் நாட்டைப் பாடிய பொழுது என் மனம் என்ன பாடுபட்டது என்பதை நீ அறிவாயோ?

"நெடுங்கடலே ! செந்தமிழ் நாட்டைக் கொள்ளை கொண்டமையால் நீ கொடுங்கடல் ஆயினாய் ! உன் கொடுமையால் நாடிழந்த பாண்டியன் வடதிசையிலுள்ள கங்கையும் இமயமும் கொண்டு வசையொழிய வாழ்ந்தான். உன்னைத் துாற்றுவேன்; அம்மன்னனைப் போற்றுவேன்.

" வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி"

என்று வாழ்த்திக்கொண்டு கடற்கரையைவிட்டு அகன்றார் அம்முனிவர்.





1. நெடியோன் குன்றம் = திருவேங்கடமலை,

தொடியோள் பெளவம் = குமரிக்கடல்
சிவப்பதிகாரம்: வேனிற் காதை

2. சிலப்பதிகாரம் : காடுகாண் காதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/13&oldid=1245438" இலிருந்து மீள்விக்கப்பட்டது