பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

வெண்கலத் தலையைத் தாழ்த்தியபடி, உறுதியாகச் சொன்னான்.

"ஆமாமய்யா, அதெல்லாம் உண்மைதான். நீங்கள் காண விரும்புகிறபடிதான் மனிதர்கள் காட்சியளிக்கிறார்கள். அவர்களை தயையுடன் நோக்குங்கள். அப்பொழுது அவர்களுக்கும் உங்களுக்கும் நன்மை செய்தவர்களாவீர்கள். அவர்கள் மிக நல்லவர்களாக ஆகிவிடுவர்; நீங்களும் கூடத் தான். இது ரொம்பச் சுலபமானது; இல்லையா?"

காற்று மேலும் மேலும் கனத்துச் சாடியது: அலைகள் உயர்த்து துள்ளின; பளபளப்பும் வெண்மையும் பெற்றுத் திகழ்ந்தன. கடல் மீது கண்ட பறவைகள் பெரிதினும் பெரிதாய் வளர்த்து, வேகமாய் வெகு தொலைவினும் தொலைவாய் எற்றுண்டு போயின. மூன்று வரிசைப் பாய்களுடன் தெரிந்த இரண்டு படகுகளும் எப்போதோ அடிவானத்தின் நீல விளிம்பினுள் மறைந்து போயின.

தீவின் சரிந்த கரைகள் வெண்ணுரைப் போர்வை பெற்றன; நீல நீர்த் தொகுதி பேரோசையுடன் மோதிச் சிதறியது; ஓய்வற்ற, உணர்ச்சி நிறைந்த இரைச்சலை விடாது முழங்கிக்கொண்டிருந்தன வலிக்காடப் பூச்சிகள்.


*