பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

மனித இறைச்சி, தின்னும். இந்த இந்தியர்கள் வேறு தீவுமக்கள் யாருடனும், உறவுவைத்துக் கொள்வதில்லை. ஆனால், மாட்ரிமோனியேர் தீவில் உள்ள பெண்களுடன் உறவு கொண்டுள்ளார்கள். இந்தப் பெண்கள் வில்லம்பு உபயோகிப்பதில் வல்லவர்கள். போரில் தங்களைக் காத்துக் கொள்ள செப்புத் தகடுகளால் மறைத்துக் கொள்கிறார்கள். இவர்களுடைய தீவில் ஓர் ஆண்பிள்ளை கூட இருக்க இடமளிப்பதில்லை. எஸ்பானோலாவைவிடப் பெரிய ஒரு தீவு இருக்கிறதென்று சொன்னார்கள். அங்குள்ள மக்களுக்குத் தலையில் முடியேயில்லை. இந்தத் தீவுகளிலிருந்து மாதிரிக்காகச் சில இந்தியர்களை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன்.

முடிவாகச் சொன்னால் மேன்மைதங்கிய மாமன்னரும் பேரரசியாரும், விரைந்து முடித்த இந்தப் பயணத்தைக் கொண்டு நான் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் தங்களுக்குக் கொண்டுவந்து கொடுக்க முடியுமென்பதை அறிந்துகொள்ளலாம். அவர்கள் எனக்கு ஒரு சிறு உதவி செய்தால் போதும்; வாசனைப் பொருள்களும் பருத்தியும் தவிர, கிரேக்க நாட்டிலும், சியோங் தீவிலுமே கிடைக்கக் கூடிய பசைப் பொருளும், கரும்போழை மரமும் எத்தனை கப்பல் வேண்டுமானாலும் ஏற்றி அனுப்புவேன். உத்தரவிடும் எண்ணிக்கையுள்ள அடிமைகளைப் பிடித்து. ஏற்றுமதி செய்தனுப்புவேன். சீனக்கிழங்கும், கருவாப்பட்டையும்கூட நான் கண்டுபிடித்திருக்கிறேன். இன்னும் நான் அங்கு வீட்டுவந்தவர்கள் அங்கு கிடைக்கும் எத்தனையோ பொருள்களைக் கண்டுபிடித்திருப்பார்கள். கப்பல்கள் மட்டும் என் தேவைக்குச் சரியானபடி பயன்பட்டிருந்தால் இன்னும் எத்தனையோ செயல்கள் செய்திருப்பேன்.

தன்வழியில் நடப்போருக்கு வெற்றியளிக்கும் என்றுமுள்ள இறைவன் என் பங்கில் தன் கருணையை நிறைய