பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

及2垒 பருத்தி, கடுகு முதலிய பயிர்கள் கோடையிலேயே அறுவ டையாகிவிட்டன : இப்பொழுது அவற்றை மீண்டும் விதைத்திருந்தார்கள் அல்லது கட்டிருந்தார்கள். ஆட்டு மங்தைகளே ஒட்டிக்கொண்டு செல்லும் சிறுவர் களையும், கிராமச் சங்தைகளையும், கிணற்றடியே காத் திருக்கும் பெண்களேயும், அடுப்பெரிக்க உபயோகிக்கும் வரட்டிகளே உலருவதற்காக சுவர்களில் தட்டிவைக்கும் பெண்களையும் அவர்கள் கடந்து சென்ருர்கள். நோயுற்ற மக்கள் அல்லது ஏதாவது காயமடைந்த மக்களே ஜூடியின் தந்தையின் கண்ணில் பட்டார்கள். அவர்களைப் பற்றி அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் ஏராளமாகத் தென்பட்டனர். அவர்கள் துன்பமும் பெரி தாகக் காணப்பட்டது. இலவச மருத்துவசாலைக்குப் போகாவிட்டால் ஒரு மாத்திரை ஆஸ்ப்பிரின் வாங்கு வதற்கும், முழுமையாக ஓரணு செலவாகும். கிராமக் கடைக்காரன் ஒரு புட்டி வாங்கி வைத்துக்கொண்டு அப்படி அவர்களுக்கு விற்று ஏராளமாக லாபம் அடித்துக் கொள்வான். ஆ அல் ஏழை ஒருவனுக்கு முழுமையாக ஒரு புட்டி வாங்குவதென்பது முடியாத காரியம். சில இடங்களில் சாலையைச் செப்பனிட்டுக் கொண் டிருந்தார்கள். சேலே கட்டிய பெண்களும், அநேகமாக ஒன்றுமே அணிக்துகொள்ளாத ஆண்களுமாக டஜன் கணக்கான மக்கள் அங்குத் திரளாக இருந்தனர். கூடைகளில் மண்னேயும் கல்லையும் சுமந்துகொண்டும், சலித்துக்கொண்டும், மிதித்துக்கொண்டும், செல்வம் மிகுந்த நாடுகளில் இயந்திரங்கள் செய்யும் வேலைகளே யெல்லாம் அவர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒரு சமயம் அவர்கள் ஒரு சிறிய பட்டணத்தின் வழியாகச் சென்றனர். வாடகைக் கார் அங்கு கிடையாது. அதற்குப்