129 தங்கும் விடுதியிலே இருப்பது வேடிக்கையாக இரும் தது. இரவிலே எத்தனையே வகையான ஒலிகள் கேட்டன. ஜூடி காலேயில் விழித்துக் கொண்டபோது ஜன்னலுக்குப் பக்கத்திலே வெளியில் கிளிகள் பறந்துகொண்டும், கிளே களின் மீது கடந்துகொண்டும் பச்சைக் காய்களை அலகில் வைத்துக்கொண்டும், சண்டையிட்டுக் கொண்டு இருந்தன. அவளே அவைகள் கவனிக்கவேயில்லை. கொசுவலைக்குள்ளே அவள் படுத்திருந்தது ஒருவேளை காரணமாயிருக்கலாம். அவள் ஒரு கூண்டுக்குள்ளிருப்பதாக அவை கினைத்தன போலும். அவர்கள் காலே உணவை முடிப்பதற்குள் அந்த இளே ஞன் ஜீப்புடன் வந்துவிட்டான். கொடியான ஒரு சாலையின் வழியாக அவர்கள் விரைந்து சென்றனர். பெயர்ப்பலகை ஒன்றைத் திரும்பிப் பார்த்துக்கொண்டு அவன் 'இங்கே தான்!” என்ருன். பொன்னேரி என்று பெயர்ப்பலகை காட் டிற்று. 'ஓகோ, இதுதான் லட்சுமி இருக்கும் கிராமம். இதுவே தான்!” என்று ஜூடி கடவினுள். பொன்னேரி என்று எத்தனையோ கிராமங்கள் இருக் கலாம்” என்ருள் அவள் அன்னே. 'ஆளுல் இது தான் லட்சுமியிருக்கும் கிராமம். எனக்குத் தெரியும்!” என்று ஜூடி உரக்கக் கூறினுள் அவளுக்கு ஒரே குதுாகலம். "இதுவாகத்தான் இருந்தாக வேண்டும்' நன்ருகப் பார்ப்பதற்காக அவள் துள்ளி எழுக் தாள். ஒரு கல்லின்மேல் ஏறிக் குலுங்கிய ஜீப்பின் மீது அவள் தலை மோதிற்று. ஜூடிக்கு உண்மையாகவே அழுகை வந்துவிட்டது.
பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/128
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை