பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷5° மூன்று அறைகள் இருக்கலாம் என்று ஜூடி கருதினுள்; ஆளுல் அவற்றில் ஒன்று சமயலறையாக இருக்கலாம். யாரோ-யூரீமதி ஞானம்மாளா? - தன் தாயிடம் அவர்கள் வீட்டிலே பல சாமான்களே விற்றதாகச் சொன்னர்கள். ரேடியோவையும், கல்ல மரச்சாமான்களையும் அவர்கள் விற்கவேண்டி நேர்ந்திருக்கலாம். ஐயோ பாவம், முன்பெல் லாம் கிறைய ககைகள் அணிந்துகொண்டிருந்த லட்சுமியின் தாய் இப்பொழுது ஒரே ஒரு சிறிய கழுத்துச் சங்கிலி மட்டும், அணிந்திருப்பதை ஜூடி திடீரென்று உணர்ந்தாள். ஆளுல் இவற்றையெல்லாம் ஒருவரும் கவனிக்கக் கூடாது-எல்லா வற்றையும் கண்டு கொண்டதாக ஒருவரும் காட்டிக் கொள்ளக்கூடாது. கந்தனுக்கு ஏதோ சிரங்குபோல வந்திருந்தது; அதனுல் ஜூடியின் தங்தை அவனைக் கவனித்துப் பார்த்தார். அதைப் போக்க ஒரு களிம்பு அனுப்புவதாகச் சொன்னுர். அதை அனுப்புவதில் அவருக்கு ஒரு சிரமமும் இல்லையென்றும் தெரிவித்துக்கொண்டார். பாதசரங்களை இன்னும் அணிந்து கொண்டிருந்த குழந்தைதான் யாதொரு வகையான மாறு தலும் இல்லாமல் தோற்றம் அளித்தது. லட்சுமியும், சரஸ்வதியும், குமாரும் இரவு உண்டி அருந்துவதற்காகத் தங்கள் விடுதிக்கு வந்தனர். கல்ல தேனீர் விருந்து அளிக்காததற்காக அவர்கள் மன் னிப்புக் கோரினர்கள் - முன்னலேயே அவர்களுக்குத் தெரிந்திருந்தால்.........."ஜூடி, என் காட்டிய வகுப்பு, உனக்குப் பிடித்ததா?” என்று லட்சுமி கேட்டாள். "ஓ கன்ருகப் பிடித்தது என்னல் எப்பொழுதாவது அப்படிச் சொல்லிக் கொடுக்க முடியுமென்று தோன்ற வில்லை. ஆரம்பத்திலே மிகவும் கஷ்டமாக இருக்க வில்லையா?” என்ருள் g2 Φιη.