பக்கம்:கடல் முத்து.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைக்கலி முதல் பிரம்மா பெருமூச்செறிந்தார். முதற் பூ மடலவிழ்ந்தது. முதல் குரல் புறப்பட்டது. குழந்தை அழுதது; அழுதது; அப்படி அழுத்தி: அபாயங்களைத் தன்னுள் அடக்கிக் கிடந்த காடு. கூப்பிடு தொலைவில் ஒரு காட்டாறு. கருக்கல் பொழுது. புல் தரை; பிறந்த மேனியாய்க் கிடந்தது பச்சை மண். பச்சை ரத்தம் மேனியை வெட்டிப் பாய்ந்தோடத் துடித்துக் கொண்டிருந்தது. குழந்தையின் உடல் துடி துடித்தது. நஞ்சுக் கொடி துவண்டு கிடந்தது. ரத்தத்துளிகள் : கோடுகளில், பல கோணங்களில் சிந்திக் கிடந்தன. பன்னீர்த் துளிகள் அந்தக் குருதிப் புனலில் இரண்டறக் கலந்தன. " . புள்ளி மான்கள் ஓடிவந்தன. வண்ணப் பறவைகள் நாடி வந்தன. வாயில்லாப் பிராணிகள் வாய்விட்டுப் புலம்பின. - - W அந்தக் குழவியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. குழந்தைத் தெய்வம் அழுதது; அழுதுகொண்டேயிருந்தது. மன்றுளே மாறியாடு மறைச் சிலம்படிகள்' நடுங்கின: வென்றுளே புலன் களைந்தார் மெய்யுணருள்ளந்தோறுஞ் சென்றுளே அமுதமுற்றுந் திருவருள் திகைத்தது; சிவன் சிந்தித்தார். கவுணியர்க்குப் பால் சுரந்த சக்தி' தடுமாறினுள்: பங்கயற்கணரிய பரம் பரனுருவே தனக்குரிய படிவமாகி, எண்ணிறந்த சராசரங்களினின்றுந் தாழாக் கொங்கயற்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/130&oldid=764977" இலிருந்து மீள்விக்கப்பட்டது