பக்கம்:கடல் முத்து.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏய் காளி 台签 வீட்டின் தாழ்வாரத்தில் கைகளால் முகத்தை ஏற்றபடி உட்கார்ந்திருந்தாள் அவன் தங்கை. சீவி முடித்திருத்தாள்: புது ஆடை உடுத்தியிருந்தாள். அழகான முகம் பொலி வுடன் விளங்கியது. குமாரசாமி ஐயா இருக்காங்களா? என்று கேட்டுக் கொண்டு காளி முன்னே வரலான்ை. திரும்பவும் ரயிலடிக் குப் போக ஏதாவது சான்ஸ் தட்டலாமல்லவா? உட்கார்ந்திருந்த அப்பெண்ணே ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். யாருடைய முகம் அது? காளி பின்னும் ஒர் அடி முன் எடுத்து வைத்து, அந்த யுவதியை நோக்கின்ை. 'நெசமாவே நம்ப தங்கச்சியேதான இது?கனவின் தொடுகோட்டில் சஞ்சரித்துக்கொண்டிருந்த அவனுக்குச் சுய நினைவு முடுக்கப்பட்டதும் அடுத்தும் ஒரு தரம் அவளேப் பார்த்தான். தன் தங்கச்சியைப் போன்ற அதே சாயல-அதே முகம: அதே பார்வை. அப்படியென்ருல் அவள்தான் அவன் தங்கையா? அவன் தங்கச்சியை அப்படியே உரித்து வைத்திருந்தது போலிருந்தது அப்பெண்ணின் உருவம். ஆனல் தன் தங்கச்சி மண்ணுகிவிட்டிருப்பாள் என்பதையும் காளி அவ்வப்போது உணராதில்லை. என்ருலும் சபலம்-பாசம் அவனே ஆட்டிப் படைத்தது. ஆட்டுவித்தால் ஆடாதார் யாரே உளர் இனம் விளங்காத பாந்தவ்யம், சிதைந்த எண்னக் கலவையின் பிரதிபலிப்பென அந்தப் பெண்மீது கனிந்தது. காளிக்கு. அவள் அவனுள் இடம் பெற்ருள். தங்கச்சிஅழைத்த மனம் மணம் பெற்றது; உள்ளம் மலர்ந்தது: உடல் சிலிர்த்தது. காளி பரவசமடைந்தான். நரம்புக்கு நரம்பு புத்துயிர் ஊர்ந்து கிளர்ந்தது. தங்கச்சி என்ற பாசத்தின் பிணைப்புடன், துல்லிய அன் போடு அந்தப் பெண்ணை இமை கொட்டாது பார்த்து நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/72&oldid=765047" இலிருந்து மீள்விக்கப்பட்டது