பக்கம்:கடல் முத்து.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையலும் தையலும் y f மேலுக்கு முடியலே. என்னமோ போல வருது, கொஞ்சம் சுடு தண்ணி வச்சுக் கஞ்சி காச்சித் தர்றியா?* வெள்ளே உள்ளத்துடன் கெஞ்சின்ை முருகு. 'ஆகட்டும் அண்ணுச்சி." அடுப்புப் பற்றவைத்து மாடன் கஞ்சி தயாரித்தான். பிறகு குவளையில் ஊற்றி ஆறவைத்தான். மறுபடியும் உள்ளே சென்று ஏதோ ஒன்றை எடுத்து வந்து கஞ்சியில் தூவிக் கலந்தான். அவன் கைகள் நடுங்கின: உடல் வியர்த்துக் கொட்டியது. குவளையைத் தொட்டுப் பார்த்தான். சூடு தாள வில்லை. ஆறட்டுமே என்று பொறுத்திருந்த அவனுக்குத் துரக்கம் சுருட்டிக்கொண்டு வந்தது; தூங்கிவிட்டான் போலும்! - சற்றைக்கெல்லாம் 'தம்பி. . . தம்பி. . . என்று முருகு அலட்டினன். அலறல் கேட்டுக் கண் விழித்தான் தம்பி மாடன். தம்பி, நான் உனக்கு என்ன திவினை செஞ்சேன். . . ஏதுக்கு என்னை இப்படிச் சந்தேகப்பட்டே? உன் சந்தோஷம் ஒண்டியேதான் என் மூச்சுண்ணு எண்ணிப் பூரிச்சிருந்தேன். ஆன நீ என்னை இப்படி உசிரோடே கொல்ல நினைப்பே யின்னு துளியும் எண்ணலையே... அதுதான் நீ மனசிலே முடிச்சிருந்ததை உன்னையறியாமல் தூக்கத்திலே உன் வாய் வெளியே கொட்டிருச்சுதே! தம்பி, ஒங்கிட்டே ரெண்டு, மூணு நாளு முந்தியே சொல்லியிருக்கவேணும். அந்தப் பொண்ணு வஞ்சியை ஒனக்கே கண்ணுலம் செஞ்சு வச்சிர வேணுமின்னு நேத்திக்கு அதுகிட்டே அளப்பறிஞ்சு பார்த் தேன். ஆன என் கெட்ட காலம் என்னைச் சம்சயிச்சுட்டது போல. அத்தோடே என்னைப்பற்றியும் உங்கிட்டே அவதூறு சொல்லியிருக்கு. தம்பி, நீயும் வஞ்சியும் சந்தோசமா இருங்க. அதுவே என்னுடைய ரொம்ப நாளையக் கன. உள்ளே கலயத்திலே அம்பது ரூபாய் பணம் இருக்கு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/80&oldid=765056" இலிருந்து மீள்விக்கப்பட்டது