பக்கம்:கடல் முத்து.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவிலே வாழ்வு ஆயா, வருசப் பிறப்புக்குத் தங்கச்சியையும் மச்சானை யும் நம்ப வீட்டுக்கு அழைக்கணும்பில்லே, அதுக்காக அவங்க ரெண்டுபேருக்கும் புது வேட்டியும் சேலையும் எடுத் தாந்திருக்கேன்." தம்பி, நானுந்தான் அப்பவே பிடிச்சு ரோசிச்சுக் கிட்டிருந்தேன். நல்லதாப் போச்சு நீயே முந்திக்கிட்டது. பின்னே அவங்களையெல்லாம் சும்மாவா கூப்பிடறது; அதி லேயும் இந்த வருசந்தானே முதல் தேவை. ஆமா, அல் லாம் எம்பிட்டுப் பணமாவுது?" - 'இருபது ரூபாய் கிட்டக்க ஒடிருச்சு. இதுக்குக் குறைஞ்சு எடுத்தாக்க இந்தக் காலத்திலே துணி வகைப் படுமா? அதோடே இன்னிக்குத் தேங்காய் லாவாரம் கொஞ்சம் மவுசு ஒரு மூச்சிலே அம்பிட்டும் முதலா யிடுச்சு- என்று சொல்லி அத்துடன் பேச்சிற்கு முத்தாய்ப் பிட்டான் சின்னையா. தன் தாய் துணிமணிக்காக எங்கே அதிகம் செலவழித்துவிட்டதாகக் குறைப்படுவாளோ என்ற அச்சம் ஒருபுறம் லேசாக அவன் மனதைச் செல்லரித்தது. தைலம்மாதான் தற்சமயம் வீட்டுக்குப் பொறுப்பு. அவள் கணவன் இறந்த பிறகு குடும்ப நிர்வா கம் பூராவும் அவள் கண்காணிப்பிலும், கண்டிப்பிலுந்தான் முன்னேறியது. ஒட்டு வீட்டு மாசிமலைத் தேவன் வழி வமிசமென்ருல் பின்னே சும்மாவா? தன் தங்கச்சி விஷயத்தில் பணம் செலவழிக்கச் சின் னையா ஒருபோதும் யோசிக்கமாட்டான். அதில் அவனுக்கு என்றும் தனித்த பெ ரு மி தம் சுழித்தோடும். உடன் பிறந்த தங்கை-அவள் முகத்தில் என்றும் ஆனந்தம் மலருவதற்காக சின்னையா எதையும் தியாகம் செய்யச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/83&oldid=765059" இலிருந்து மீள்விக்கப்பட்டது