பக்கம்:கடல் முத்து.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. கடல் முத்து ஆமா, வள்ளி' என்ருன் சின்னையா. அவர்கள் ஜாதிக் கட்டுப்பாடு அத்தகையதொரு உரிமைக்கு-புது வாழ்விற்கு அனுமதித்தது. அதைப்பற்றி அவர்களுக்குள் விகற்பமோ, வித்தியாசமோ கிடையாது. - தமையனின் வார்த்தைகளைக் கேட்டதும் வள்ளி நிலை கலங்கிப் போனுள். . சின்னையா மாங்குடிக்குப் பரிசம் போடப் போய் அன் றுடன் இரண்டு நாட்கள் ஒடியிருந்தன. அப்படின்னு மச்சானுக்கும் எனக்கும் இனிச் சொந் தமே இல்லையா, என்ன அநியாயம்?' என்பதாக எண் ணிறந்த முறை தன்னுள் குறைப்பட்டுக்கொண்டாள் வள்ளி. அவள் பெண் நெஞ்சில் பிரளயம் பிரவகித்துப் புரண்டது! தண்ணீர் மொண்டு வரச் சென்ருள் வள்ளி, வழியில் ஏளே வள்ளி' என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த் தாள். எதிரே வந்து நின்ற அந்தப் பெண்ணேக் கண்டதும் ஒரு கணம் அவள் பிரமித்து நின்ருள். ஏனென்ருல் அந் தப் பெண்தான் மாரிக்குப் புதிதாக வாழ்க்கைப்படவிருக் கும் கண்டிச் சீமைப் பெண்!" "வள்ளி, என்னேக் கண்டு ஏதுக்கு இப்படிச் சில கணக்காப் போயிட்டே? மாரி அத்தான் வலையிலேருந்து நல்ல வேளை தப்பிச்சுட்டேன். ஏற்கெனவே அவருக்கு நீ வாழ்க்கைப்பட்டு, கடைசியா உன்னை விலக்கிட்டது எல் லாம் இப்பத்தான் சேதி காதுக்கு எட்டுச்சு. வள்ளி, உனக்குத் துரோகம் பண்ணி நான் அவரோடே வாழக் கொஞ்சமும் எனக்குப் பிடிக்கலை. ஆன பாவம்...மாரிக்கு இந்தத் தண்டனை வரவேணும். இரண்டு நாள் முன்னலே சந்தையிலிருந்து வரப்போ யாரோ ரெண்டு பேருங்க வழி மறிச்சு மாரியை அடிச்சுப் போட்டுட்டாங்களாம். ஆளு பிழைக்கிறது.கூட அரிதுன்னு பேசிக்கருங்க. ஒனக்கு விசயமே தெரியாதா?’ என்ருள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/89&oldid=765065" இலிருந்து மீள்விக்கப்பட்டது