64
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
கொண்டிருந்தாள் இரவில் மீதியாகி இருந்த மாவைத்தான் காலையிலும் இட்லியாக்கிக் கொண்டிருந்தாள்.
‘இன்றுதான் நான் இலங்கைக்குப் போகப் போகிறேனே! என் கையால் உனக்கு இட்லி சுட்டுத் தருகிறேன். சாப்பிட்டுவிட்டு என் சமையலைப் பற்றி உன் பாராட்டைக் கூறு’ என்று சாகசமாகப் பேசினார் அற்புதசாமி!
அடுப்படிக்கே எப்பொழுதும் வராத தனது அண்ணன், எப்படி இன்றைக்கு இவ்வளவு பொறுப்பாக வந்து பேசுகிறார்! சிவகாமிக்கு ஒரே ஆச்சரியம்.
‘பரவாயில்லை, அண்ணா! நீங்கள் போய் பயணத்துக்கு வேண்டியவைகளை தயார் செய்யுங்கள். இன்னும் ஒரு நிமிஷத்தில் இட்லி தயாராகிவிடும்’ என்றாள்.
கேட்பாரா அற்புதசாமி கடைசி வரை சிவகாமி எவ்வளவோ மறுத்துக் கூறியும், திரும்பத் திரும்பப் பேசி, தன் எண்ணத்திற்கே தன் தங்கையை சம்மதிக்கச் செய்தார்.
பயணத்திற்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைக்கும் பொறுப்பு சிவகாமியிடம் சேர, இட்லி தயாரிக்கும் பொறுப்பு அற்புதசாமிக்கு வந்தது.