பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


8. சக்தியும் பக்தியும்


காலையிலே எழுந்ததும் காபி குடிப்பதுபோல் தன் வீட்டிற்குவந்து, காபியுடன் காலை ஆகாரமும் சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடங்கிவிடும் நடேசனை தருமலிங்கம் அன்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆள் வரவில்லை,

‘மனைவிக்கு உடல் நலம் இல்லை என்றாரே, எப்படியும் மாலையில் வந்து நம்மைப் பார்ப்பார்’ என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டு, மற்ற வேலைகளைக் கவனித்தார். ஆனாலும், மனம் எதற்காகவோ, நடேசனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

மாலையிலும் நடேசன் வரவில்லை, தருமலிங்கத்திற்குத் ‘திகீர்’ என்றது. ஒரு வேலைக்காரனை அனுப்பிப் பார்த்துவிட்டு வரச் சொன்னார். சரியான பதிலில்லை. பிறகு தானே போய் விசாரித்தார்.