கடவுள் கைவிட மாட்டார்
77
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது! ‘நிச்சயம் என் பிரார்த்தனை நிறைவேறும்’ என்று நம்பினாள் மீனாட்சி...
அம்பிகைக் கோயில் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. கண்களில் கண்ணீரைத் துடைத்து கொண்டு கோயிலை நோக்கி ஓடினாள் மீனாட்சி.
இன்னும் பத்தே நிமிடந்தான் இருக்கிறது. அற்புத சாமிக்கோ ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வருடமாகத்தோன்றியது. அங்கிருந்த கடிகாரத்தின் முள் அப்படியே நிற்பதுபோல் தோன்றியது. என்ன கடிகாரம்? ஆமை வேகத்தில் போகிறதோ என்று அசட்டுத்தனமாக வேடிக்கை செய்தார்.
அங்குமிங்கும் போய் வேடிக்கை பார்த்து விளையாடிக்கொண்டிருந்த முருகனுக்கு, பசி வந்து விட்டது.
“அப்பா பசிக்குது என்றான் வந்து மடியில் உட்கர்ந்து கொண்டே.”
பசிக்குதாடா கண்ணு! இந்தா! என்று பொட்டலத்தை அவிழ்த்து, ஒரு இட்லியை எடுத்துக் கொடுத்தார்.
‘இன்னும் ஒரு இட்லிப்பா’ என்றான் முருகன்! அதற்கென்னப்பா உனக்கில்லாத இட்லியா? என்று