பக்கம்:கடவுள் பாட்டு.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

விரிந்த வானின் மேல்விரிந்த
வெளியாய் நிற்கும் ஒளிப்பொருளே
இருந்த அணுவின் உள்ளடங்கி
இருக்கும் நுண்மைச் சிறுபொருளே
அருமை மிக்க பொருளிலெலாம்
அருமை யான அரும்பொருளே
பெருமை மிக்க பெருந்தலைவா
பிரியேன் உன்றன் திருவடியே!

49

நூறு கலைகள் கற்றாரும்
நுகர்தற் கரிய இன்பொருளே
ஈறு முதலும் அற்றவனே
இனிக்கும் உன்றன் அடிபற்றும்
பேறு மிக்கார் எளிதாகப்
பெறுதற் கிசைந்து வருந்தேவே
கூறு பட்ட மதங்களிலே
கூடா தென்னைக் காத்தருள்வாய்.

50


அன்பு மனைவி ஒருத்திதனை
அளித்தாய் எனக்கு நீஇறைவா!
பின்பு நானோர் பெண்தேடிப்
பிழையா வண்ணம் அருள்புரிவாய்
துன்பம் வளரும் பலபெண்கள்
தொடர்பால் நல்ல மனம்போகும்
உன்பொன் னடியைப் பற்றுகின்ற
உறுதி கொண்டேன் எனைக்காப்பாய்!

51


கன்னங் கரிய கூந்தலினைக்
கருவண் டனைய பெருவிழியைச்
சின்னஞ் சிறிய துடியிடையைச்
செவ்வாய் அழகுப் புன்சிரிப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/23&oldid=1201919" இலிருந்து மீள்விக்கப்பட்டது