பக்கம்:கடவுள் பாட்டு.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


அழுதேன் உன்னை நினைந்தொருகால்
ஐயா என்றன் துயர்துடைத்தாய்.
தொழுதேன் உன்றன் அடியிரண்டும்
துணையாய் என்றன் அருகடைந்தாய்.
துளிதேன் எனினும் சுவைபெரிதே
தூயோய் உன்றன் அருள்செறிந்த
ஒளிதான் சிறிதே பாய்ந்திடினும்
உள்ளம் வெள்ளப் பெருக்காமே.
154
அறிவில் லாமல் நான்கொண்ட
ஆண வத்தால் பலசெய்தேன்
நெறியன் றேனும் பெருமானே
நீம னத்தில் கொள்ளாதே.
குறியாய் உன்றன் திருவடியைக்
கொண்டு தெய்வத் தொண்டுசெயும்
வெறியைக் கொண்டேன்!; மனத்திமிரை
விலக்கி விட்டேன் காத்தருள்வாய்!
155
அவத்தைச் செய்தேன்; நெறிமுறையே
அழித்தேன்; பொய்யை மெய்யென்றேன்
இவற்றைப் போலே எத்தனையோ
இன்னும் தீமை பலசெய்தேன்.
தவற்றுக் கெல்லாம் என்னைநீ
தண்டிப் பாயென் றறிந்துள்ளேன்.
அவற்றுக் கெல்லாம் அப்பால் உன்
அருளைப் பொழிய மாட்டாயோ!
156
செய்த செயல்கள் என்னைமிகச்
சிறிய னாக்கி விட்டதனால்
எய்தக் கருதும் இலக்கைநான்
எய்தொ ணாது பிறரெலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/53&oldid=1211757" இலிருந்து மீள்விக்கப்பட்டது