பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/6

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

படித்துறை

முருகு கால் நூற்றாண்டுகள்
என் அருகிருந்து பழகிய நண்பர் ;
பாட்டுக் குயில் ; இன்னிசை எழுத்தருவி !


தமிழகப் பாட்டரங்குகள்
இவரை ஏந்திப் புகழ்பெற்றன.
தமிழ்ப் பாட்டிலக்கியம்
இவர் எழுத்தால் புகழ்பெற்றுக் கொண்டிருக்கிறது.


கடை திறப்புக்கு இது
மறுமணப் பதிப்பு.
இதில் உள்ள பாடல்கள்
இந்தியிலும் ஆங்கிலத்திலும்
மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.


உலகப் புகழ்பெற்ற
பேச்சுக்களும் கடிதங்களும்
கற்பனை நயத்தோடு கவிதையாக்கப்பட்டுள்ளன.


‘முருகு’ என்ற சொல்லுக்கு
இளமை, அழகு என்ற பொருளுண்டு.
இளமையும் அழகுணர்ச்சியும்
இந்நூலில்-
வரிக்கு வரி போட்டியிடுகின்றன.
பொருள் புதிது ; சுவையும் புதிது.


வரலாறு படைக்கும் தரமான நூல்களை
வெளியிட்டுப் புகழ்பெற்ற வேலாவின் குறளியம்
இந்நூலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.


ஈரோடு - 1

1–3–81

வேலா இராசமாணிக்கம்