பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72



வரிக்கண்ணால் உன்னைப்போல்
வார்த்தைகளை வழங்குமிந்தப்
புத்த கத்தைச்
சிரிப்புமலர் மரத்தடியில்
சீக்கிரத்தில் நான்படித்து
முடித்து விட்டேன்.
சுருக்கிவைத்த சுவைக்காமச்
சூத்திரநூல் போன்றவளே!
வெறும் எழுத்தை
நெருக்கிவைத்த புத்தகத்தை
நீயிருந்தால் நான்விரும்பித்
தொடவே மாட்டேன்.

பக்கத்தைப் புரட்டுகையில்
படங்காட்டும் பழத்தோட்டப்
பாட நூலே
இக்கடிதம் இந்நூலில்
இத்தாலி மொழியினிலே
எழுதி டாமல்
மிக்கபுகழ் ஆங்கிலச்சொல்
மேனியினால் நான் எழுதி
யுள்ளேன்; உன்றன்
பக்கத்தில் இருப்பவர்கள்
பார்த்திதனைப் படிக்காமல்
இருப்ப தற்கே.