பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பே என் மேகலையே !


முல்லையும், மேகலையும் சென்னையில் பயின்ற கல்லூரித் தோழிகள். முல்லை சேலத்து வீணை; மேகலை யாழ்ப்பாணத்து யாழ். ஒரு பெண்ணின் எண்ணத்தில் என்றும் பசுமையாக நிலைத்திருக்கும் நிகழ்ச்சிகள் மூன்று. அந்த எண்ணப் பசுமையை எழுத்தில் எற்றித் தன் தோழிக்கு அனுப்புகிறாள் முல்லை.