பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

உரோம நாகரிகத்திற்கும் முற்பட்டது. உலகத்தையே கட்டியாண்ட உரோமானியர்கள் எகிப்து நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்த பொழுது, அங்கு விண்ணையிடித்து நிமிர்ந்து நின்ற பிரமிடுகளையும், மாபெரும் கோவில்களையும், கலை நுணுக்கம் மிக்க சிற்பங்களையும், வானளாவிய அழகுத் தூண்களையும் கண்டு வியப்படைந்தனர். அவ்வழகுச் சின்னங்களைத்தான் அவர்களால் காண முடிந்ததே தவிர, அம்மாபெரும் நாகரிகத்தின் சிற்பிகளான அம்மக்களைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ள முடியவில்லை. உரோமானியர்கள் காலடி வைப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பாகவே அந்தாகரிகம் அழிந்துபட்டது.

எகிப்து நாட்டு நாகரிகச் சின்னங்களை நேரில் கண்டு வியந்த பண்டைக் காலத்து மக்கள், “இந் நாகரிகம் மிகவும் பழமையானது. இந்நாகரிகத்தை உருவாக்கிய மக்கள் கட்டடக் கலையிலும், சிற்பக் கலையிலும் வல்லவர்கள்; பாறைகளைப் பிளந்தெடுப்பதிலும், பளுவான பெரும் பொருள்களை இடம் பெயர்த்துக் கொண்டு செல்வதிலும், பெரும் பாறைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி மலைபோன்ற கோபுரங்களை எழுப்புவதிலும் ஆற்றல் படைத்தவர்கள்” என்று மட்டுமே எண்ணியிருந்தனர். ஆனால் இந்நாகரிகத்தின் தலைவர்களான பாரோ மன்னர்களைப்பற்றியும், அவர்கள் சிறப்புக்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாத நிலையில் இருந்தனர்.

இருபதாம் நூற்றாண்டு மக்களான நாம், உரோமானியர்களை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்